கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி.

There was a scuffle among AIADMK members at the AIADMK workers' meeting held in Gopichettipalayam.
InShot 20250306 124723899
InShot 20250306 124656335
InShot 20250306 124628587

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் தொகுதி பொறுப்பாளராக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அங்கிருந்து வாக்குசாவடி முகவர்களிடம் எவ்வாறு பணியாற்றுவது என ஆலோசனை வழங்கிய பின் கூட்டத்தை நிறைவு செய்வதாக பேசி முடித்து அமர்வதற்காக சென்றார்.அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்தியூரை சேர்ந்த நிர்வாகி ஒருவர் திடீரென எழுந்து செங்கோட்டையனை பார்த்து ஐயா கட்சி நிர்வாகியாக இருக்கும் எனக்கு எங்கு கூட்டம் நடந்தாலும் அழைப்பு தருவதில்லை இதை இந்த கூட்டத்தில் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று தான் இப்போது பேசுகிறேன் என்றார்.இதை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி கேட்ட அந்த நிர்வாகியை மேடையின் அருகே வருமாறு அழைத்தார் .அப்போது அந்த நிர்வாகி செங்கோட்டையன் நின்று கொண்டிருந்த மேடையை நோக்கி நகர்ந்து செல்லும் போது அங்கிருந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து மேடைக்கு அருகே இழுத்துச் சென்றனர்.அப்போது அந்த நிர்வாகி மேடையில் ஏறி அங்கே நின்றிருந்த செங்கோட்டையனிடம் எனக்கு கட்சி நடத்தும் எந்த கூட்டத்துக்கும் அழைப்பு விடுப்பதில்லை என்று ஆவேசமாக பேசிய போது மேடையில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அந்த நபரை தாக்கத் துவங்கினர்.இதனைக்கேட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அந்த கேள்வி கேட்ட நபரை சுற்றி வளைத்து சரமாறியாக தாக்க துவங்கியதும் அந்த இடம் போர்க்களமாக மாறி ஒருவக்கொருவர் நாற்காலிகளை தூக்கி கேள்வி கேட்ட நபர் மீது வீசி எறியத்துவங்கினர்.அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கேள்வி கேட்ட நபர்,எந்த கட்சி பொறுப்பிலும் இல்லை,பொறுப்பில் இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது என பேசினார்,இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்து பேசுகையில்கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வியுற்றதற்கு காரணம் அங்கு முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தான் அவர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக பணியாற்றியதற்கு உங்களிடம் சி டி ஆதாரம் உள்ளது.. ;,இப்படிபட்ட ஒரு துரோகத்தை செய்து விட்டு இப்போது குழப்பத்தை செய்ய கூட்டத்திற்கு ஆள் அனுப்பி உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.,இந்த நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது இந்த நிகழ்வை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட வேண்டும் என உங்கள் பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன் என்று செய்தியாளர்களிடம் வேண்டுகோளாக கேட்டுக்கொண்டு கூட்டம் நடந்த இடத்தை விட்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.இதையடுத்து மண்டபத்தில் இருந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அனைவரும் சிதறிக்கிடந்த நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு சற்று நேரத்தில் அவர்களும் வெளியேறினர்.இந்த அடிதடி ரகளை முடிந்த பின்னர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலுக்கு உள்ளான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கூட்டத்தில் தாக்கப்பட்ட நபர் அந்தியூர் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது,

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்