கோபிசெட்டிபாளையம் காந்தி நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எம் எஸ் எம் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்..அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பேசுகையில் கடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டு பேசி வந்த செங்கோட்டையன் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எடப்பாடி யார் என பேசினார் அதிமுக என்பது ஒரு அசைக்க முடியாத இயக்கம் என்பதை இந்த நாடு அறியும்.எத்தனையோ பேர் வருகிறார்கள் முதலமைச்சர் கனவோடு, எம்.ஜி.ஆர் நேரடியாக முதல்வர் பதவிக்கு வரவில்லை,முகத்தை காட்டினால் 30 லட்சம் ஓட்டு விழும் என்று அண்ணாவால் பாராட்டு பெற்றவர் எம்ஜிஆர்.எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 195 இடங்களில் வாக்கு சேகரிக்காமல் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்,சத்துணவு திட்டத்தை நிறைவேற்ற துண்டேந்தி பிச்சை எடுத்து நிறைவேற்றி காட்டுவேன் என தெரிவித்தவர் எம்ஜிஆர். உலகத்திலே அம்மா என்று அழைக்கக்கூடிய ஒரே தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக இருந்தது. அப்போது தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னம் சேவல் சின்னம். அந்த தலைவர்களால் தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்.1991 ல் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றோம், கடலைக் காட்டிலும் கருணை உள்ளம் கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,செங்கோட்டையன் என்னோடு வருகிறார். நானே வாக்கு கேட்டதாக நினைத்து வாக்களியுங்கள் என்றார்.என்னுடைய உடன் பிறவாத சகோதரன் செங்கோட்டையன் என்று லட்சுமண அய்யரிடம் ஜெயலலிதா கூறினார். அவர் உயிரோடு இருந்தால் இந்த மேடைக்கு அழைத்து வந்து பேச வைத்து இருப்பேன்.வெளியே வந்த லட்சுமண அய்யர் என்னை கட்டி பிடித்து இது போதும்டா, எத்தனை கோடி சொத்து இருந்தாலும் இதற்கு ஈடாகாதுடா என்றார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது வீட்டு வரி மின்சார வரி, சட்ட ஒழுங்கு சரியாக இல்லை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் 2026 இல் அதிமுக ஆட்சி மலரும், நமது லட்சியம் உயர்வானது, நமது பாதை தெளிவானது என்றார்.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது வீட்டு வரி மின்சார வரி, சட்ட ஒழுங்கு சரியாக இல்லை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் 2026 இல் அதிமுக ஆட்சி மலரும், நமது லட்சியம் உயர்வானது, நமது பாதை தெளிவானது என்றார்

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam