ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக அரசின் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் 56 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் கார்த்திக், நம்பியூர் நில வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி கிராம நிர்வாக அலுவலர்கள் சிறுபான்மை அணி நலப்பிரிவு துணைத் தலைவர் பா.அல்லாபிச்சை, ராஜ்குமார், பாசில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.