ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் மாநில இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கீதா முரளி மற்றும் சிறுபான்மைஅணி நலப்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பா.அல்லாபிச்சை ஆகியோர் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய மளிகை தொகுப்புகள் , உதவித்தொகை ரூ1000/, மகளிர்களுக்கு சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கலந்துகொண்டு வழங்கினார்.
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோபி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் தண்டபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சென்னிமலை, பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் மெடிக்கல் செந்தில்குமார், சிறுவலூர் முருகன் ,பேரூர் கழகச் செயலாளர் ஆனந்தகுமார் ,மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் செ. சண்முகசுந்தரம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் ஜெ.வி.முருகசாமி, ரமேஷ் செல்வன் , முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எம்.வெங்கடேஷ், தொண்டரணி அமைப்பாளர் ந.க. ஈஸ்வரமூர்த்தி , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் செந்தில்குமார் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.