நம்பியூர் அருகே குருமந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் முன் நின்று அனைவரையும் வரவேற்றனர்.


இந்த பள்ளியின் கடந்த 2005 – 2007 ஆண்டு 12 ஆம் வகுப்பில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பயின்றனர். அவர்கள் பள்ளிப் பருவம் முடித்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஒருங்கிணைப்பு விழா எடுக்க முன்னாள் மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஏற்பாடு செய்து வந்தனர்.


இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 17 ஆண்டுகளுக்குப் முன்பு பள்ளியில் படித்து கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் தங்களுடைய மகன் மகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
2005 முதல் 2007 வரை அரசு மேல்நிலைப்பள்ளி குருமந்தூரில் வகுப்பு பயின்ற மாணவர்கள் தங்களின் உயர்வுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் பொருட்டு அவர்கள் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்று பொன்னாடை போர்த்தி கேடயம் கொடுத்து அவர்களை கௌரவித்தனர்இந்த விழாவினை பாலகுமார் கருப்புசாமி சங்கர் ராமசாமி சதீஷ்குமார் சுரேஷ்குமார் மற்றும் முன்னாள் மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர்.
அவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதி ஏற்றுக்கொண்டனர்விழா முடிந்த பிறகு அவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்