நம்பியூர் அருகே அத்திக்கடவு – அவிநாசி குழாய் உடைப்பு குளம் நிரம்பியதால் பாலம் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு


நம்பியூர் அடுத்த சாலைப்பாளையம் பகுதி உள்ளது சாலைப்பாளையம் வழியாக சின்ன செட்டியாபாளையம், பெரிய செட்டியாபாளையம், எம்மாம்பூண்டி, வரப்பாளையம், ராயர்பாளையம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலைப்பாளையம் வழியாக தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
ஆகஸ்ட் 17ம் தேதி அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் சாலைப்பாளையம் குளத்தில் அருகே உள்ள அத்திக்கடவு அவிநாசி ராட்சத திட்டக்குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு சுமார் 20 அடி உயரத்திற்க்கு தண்ணீர் ஆர்பரித்து வெளியேறி வருவதால் அருகில் இரண்டு குளங்கள் முற்றிலும் நிரம்பியது. சாலைப்பாளையம் செல்லும் முக்கிய தரைப்பாலம் நீரில் அரித்து உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட உள்ளது. இதனால் 6 கிலோ மீட்டர் தூரம் மாற்று பாதையில் கிராம மக்கள் சுற்றி செல்கின்றனர் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.குழாய் உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் கூறிய போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதையை சரி செய்து கொடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என கூறினர்.