கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் எல்.கே.ஜி, வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில் ஒவ்வொருவரும் மூன்று பள்ளிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அதன் அடிப்படையில் கோபி மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 38 மாணவர்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் சேர்க்க முடியும் என்ற நிலையில் இப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க 400க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள 60 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் 38 மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்க முடியும் என்பதால் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் திரெநாவுக்கரசு தலைமையில் அனைவருக்கும் கல்வி இயக்கக பி.ஆர்.டி மணிகண்டன், மொடச்சூர் கிராம நிர்வாக அலுவலர் வேலுமணி, சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இளமுருகு ஆகியோர் முன்னிலையில் தகுதி வாய்ந்த மாணவர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு வந்திருந்த குழந்தைகளை ஒவ்வொரு பெயராக எடுக்க வைத்து மாணவர்களை தேர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ரிசர்வேசனுக்காக கூடுதலாக 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
கோபி மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு கோபி டி.இ.ஓ திருநாவுக்கரசு முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.