திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் கோபியில் நடைபெற்றது.

Introductory meeting of candidates for Tirupur Parliamentary Constituency was held in Gobi.

நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இ.கம்யூ.கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டம் கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர்.செந்தில்நாதன், மாநில திமுக நெசவாளர் அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் கோ.வெ.மணிமாறன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம், மாவட்ட துணைச்செயலாளர்கள் கீதாநடராஜன், அந்தியூர் குருசாமி ஆகியோர் முன்னிலையில் தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

1714669784576077 1

இந்தியாவில் ஜனநாயக அரசியல் அமைப்பு சடலமாக இருப்பதாகவும், மோடியின் ஆட்சியில் ஜனநாயக அரசியல் அமைப்பு கொல்லப்பட்டுள்ளதாக கோபியில் நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் சுப்ராயன் பேசினார். மேலும் அவர் பேசியதாவது,

1714669780434915 2

இந்த தேர்தல் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கும் போட்டியோ, இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டியோ இல்லை என்றும், இந்த தேர்தலில் மையமான பொருள் இனிமேல் இந்தியாவில் தேர்தல் முறை நீடிக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதுதான்.

1714669776086139 3

இந்தியாவில் ஜனநாயக அரசியல் அமைப்பு சடலமாக இருக்கிறது. மோடியின் ஆட்சியில் ஜனநாயக அரசியல் அமைப்பு கொல்லப்பட்டுள்ளது என்றார்.

1714669770754938 4

வட மாநிலங்களில் மத்திய உளவுதுறை பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவு என அறிக்கை அளித்துள்ளது அதனால் தான் 5 முறை பிரதமர் தமிழகம் வந்துள்ளார். இந்தியாவில் ஜனநாயக அரசியலமைப்பு வேண்டுமா அல்லது சர்வதிகாரம் வேண்டுமா?இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல அமைச்சர்கள் பயந்து மோடியின் முன்னால் மண்டியிடுகிறார்கள்.
தமிழகம், கேரளா மற்றும் டெல்லியிலும் தான் முதல்வர்கள் தலை நிமிர்ந்துள்ளார்கள்.
அதிலும் தமிழக முதல்வர் சிங்கத்தைப் போல மோடிக்கு முன்னால் சவால் விட்டு பேசியுள்ளார் பாசிசத்தை வீழ்த்துவோம் என்று. எப்போதும் இந்தியாவிற்கு புத்தி சொல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது. என்றுமே தமிழகம் முன்னோடுகின்ற பிள்ளை தான்.புதிய பாராளுமன்றத்தை திறந்த போது 27 புனித நீரை ஊற்றி கொண்டாராம் மோடி. 17 கங்கையில் குளித்தாலும் மோடி செய்த பாவங்கள் தீராது என்றார்.கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுஜாதா ஜீவானந்தம், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சரண்யா அன்பரசு, கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment