நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மனைவி சுப்புலட்சுமி 26, இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பிரசவ வலியால் துடித்தார். உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் சுப்புலட்சுமி ஐ நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு செல்லும் வழியில் சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருள்குமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். பின்னர் தொழில்நுட்பநர் கௌரிநாத் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.அப்போது சுப்புலட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.அதனையடுத்து தாயும் சேயும் பத்திரமாக நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஓட்டுநர் அருள்குமார் மற்றும் மருத்துவ நுட்புணர் கௌரிநாத் ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.