கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கீரிப்பள்ளம் ஓடை தூர்வாரும் பணிதுவக்கம்.



மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் மையப்பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையை தூர் வாரும் பணி 26.8.2024 அன்று துவங்கப்பட்டது. இப்பணியினை நகர் மன்ற தலைவர் N.R.நாகராஜ், நகராட்சி ஆணையாளர் செல்வி த.வ. சுபாஷினி அவர்களும் தொடங்கி வைத்தனர்.
அவர்களுடன் துப்புரவு அலுவலர் திரு சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் திரு நிருபன் சக்கரவர்த்தி திரு சௌந்தர்ராஜன் , மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான திரு விஜய் கருப்புசாமி, 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திரு ஹக்கீம், 8 வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ குமார ஸ்ரீநிவாஸ். 29 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திருமதி செல்வி முருகேசன், மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .மேலும் நகரின் தன்னார்வ அமைப்புகளான கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், கோபிசெட்டிபாளையம், அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், உழவன் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம், மருந்து வணிகர்கள், கட்டிட பொறியாளர் சங்கம், ஜே சி ஐ சங்கம், Y’s மேன் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைவர் , செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர் . நிகழ்வு தொடங்கியவுடன் கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் திரு சண்முகசுந்தரம், செயலாளர் திரு விஜய் கருப்புசாமி அவர்களும் ரூ 20,000 /- மும், ரோட்டரி சங்க தலைவர் திரு பிரித்திவிராஜ் செயலாளர் திரு நித்திய பிரகாஷ் அவர்களும் ரூ 10000 /- மும், அரிமா சங்கத்தின் தலைவர் திரு ஜெயபிரகாஷ் செயலாளர் திரு கௌதம் அவர்களும் ரூ.10,000 /- மும், அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் திரு சிவன் , செயலாளர் திரு சதீஷ் அவர்களும் ரூ 10,000 /- மும் சமுதாய பொறுப்புணர்வு நிதியாக அந்தந்த சங்கங்களின் பங்களிப்பு தொகையாக வழங்கினார்கள். இப்பணியானது நகரின் மத்திய பகுதியில் செல்லும் கிரிப்பள்ளம் ஓடை முழுவதும் ஒரு வார காலத்திற்குள் தூர்வாரிட திட்டமிடப்பட்டு ஹிட்டாச்சி எந்திரம் கொண்டு தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.