கோபிசெட்டிபாளையம் அருகே வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்த கல் குவாரியில் முறைகேடாக நுழைந்து பாறைகளை வெடி வைத்து உடைக்க முயற்சித்த போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிழந்தனர்.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி்யில் சட்டவிரோதமாக கனிமவளங்களை வெட்டி கடத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டபோது அந்த குவாரி உரிமம் இன்றி செயல்பட்டு வந்ததை கண்டுபிடுத்த பின் அந்த கல் குவாரிக்குசீல் வைக்கப்பட்டதுடன் அந்த பகுதியில் வெடிமருந்துகளை பயனபடுத்தி பாறைகளை உடைக்கவோ வெட்டி எடுக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில் சீல் வைக்கப்பட்டிருந்த கல் குவாரியின் உள்ளே நுழைந்த சிலர் அங்கு சட்டவிரோதமாக பாறைகளை உடைக்க முயன்று வெடி மருந்துகளை உபயோகித்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தாகவும. பங்களாபுதூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டிருந்த கல்குவாரியை காவல்துறையினர் ஆய்வு செய்த போது அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்கான இடத்தில் பலத்த தீக்காயங்களுடன இறந்த நிலையில் இரண்டு உடல்கள் சிதறி கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இதனையடுத்து சிதறிய நிலையில் இருந்த உடல்களை அடையாளம் காண்பதற்காக அப்பகுதியில் வசித்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த போனவர்கள் செந்தில் குமார் மற்றும் அஜீத் குமார் என்பதாகவும இவர்கள் இருவரும்சீல் வைக்கப்பட்டிருந்த கல் குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இறந்த உடல்களை கைப்பற்றிய பங்களாபுதூர் காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின் கல்குவாரியில் தொடர்ரந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதறைத்தொடர்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கல்குவாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்