கோபிசெட்டிபாளையத்தில், நடந்து முடிந்த 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகளில் மாநில அளவில் மற்றும் பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு 10 வது ஆண்டாக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.


கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2024 கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது, இந்த பொதுத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே மாதத்தில் வெளியிடப்பட்டது


இந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி கல்வி மாவட்டத்தில் தமிழக அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு 10 வது ஆண்டாக விருதுகள் வழங்கும் விழா முருகன் புதூர் பகுதியில் செய்யபட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்,


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்,
ள்ளி மாணவ,மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கோபி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நம்பியூர், கவுந்தப்பாடி, டி.என் பாளையம் திங்களூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100 மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.