கோபிசெட்டிபாளையம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசானை எண் 243 ஐ ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டம்.


தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் மட்டுமே பணி மாறுதல் பெற்று வந்த நிலையில் தமிழக அரசு திடீரென மாநில அளவில் ஆசிரியர்களை பணி மாறுதல் செய்யலாம் உத்தரவை பிறப்பித்தது.


இந்த உத்தரவை ரத்து செய்து ஒன்றிய அளவில் மட்டுமே பணி மாறுதலுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.


இதனடிப்படையில்; கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அரசானை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.


அனுமதியின்றி சாலை மறியல் செய்ய முயன்றவர்களை கோபி காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.