கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக கோபிகாவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது


தகவலின் பேரில் கோபிகாவல்துறையினர் ரவுண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாரியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நஞ்ச கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஆகியோர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது
அதனைத் தொடர்ந்து இருவரை உதவியாளர் சத்யன் பிடித்து கைது செய்தார்


அதனைத் தொடர்ந்து மேட்டு வழுவு தனியார் பேக்கரி அருகில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நஞ்ச கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்தபோது இருவரையும் கோபிகாவல்துறையினர் கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.