10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நம்பியூர் அருகேயுள்ள குருமந்தூர் சாங்விங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சஸ்மிதா என்ற மாணவி 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்

இவர் தமிழ்: 97, ஆங்கிலம்: 99, கணிதம்: 100, அறிவியல்: 98, சமூக அறிவியல்: 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மௌலிதரணி என்ற மாணவி தமிழ்: 97, ஆங்கிலம்: 98, கணிதம்:99, அறிவியல்:99, சமூக அறிவியல்: 98 மொத்தம் 491 பெற்று பள்ளியில் 2ம் இடம் பெற்றார். நஸ்ரின் என்ற மாணவி, தமிழ்:98, ஆங்கிலம்: 97, கணிதம்: 97, அறிவியல்: 98, சமூகஅறிவியல்: 99 மொத்தம் 489 பெற்று பள்ளியில் 3 ம் இடம் பெற்றுள்ளார்.தேர்வெழுதியவர்களில் 490 க்கு மேல் 2 பேரும், 470 க்கு மேல் 8 பேர்களும், 450 க்கு மேல் 12 பேர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், கணிதத்தில் 6 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் இப்பள்ளியில் பயின்ற தாரணி என்ற மாணவி 600 க்கு 573 மதிப்பெண்கள் பெற்றும், ஜனனி என்ற மாணவி 566 மதிப்பெண்கள் பெற்றும், சசிதரன் என்ற மாணவன் 565 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 10, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர். திருநாவுக்கரசு, செயலாளர். சரஸ்வதி, முதல்வர். செல்வம் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்.