கோபி மாதேஸ்வரன் கோயில் வீதியில் குடிப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோபி மாதேஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்38 வயதான இவர் டிராக்டர் மெக்கானிக்கை வேலை செய்து வந்தார். சித்தேஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தால் கூறப்படுகிறது இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில் மது பழக்கத்தை கைவிடுமாறு அவரது மனைவி கவுசல்யா கூறிவந்துள்ளார் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, மனமுடைந்த சித்தேஸ்வரன் தூக்கிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.