

கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எம்ஜிஆர் சிலை அருகே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முடி திருத்தம் மற்றும் அழகு நிலையத்தை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாமி படத்துடன் வாய் பேச முடியாது என கூறி கடையில் வந்து ஊழியர்களிடம் பணம் கேட்டுள்ளார்
அப்போது ஊழியர்கள் உள்ளே சென்றபோது மேசையின் மீது கம்ப்யூட்டர் அருகே வைக்கப்பட்டிருந்த செல்போனை லாபகமாக அந்த நபர் திருடியுள்ளார்.
மேலும் திருடிய செல்போனை தனது கையில் வைத்திருந்த சாமி போட்டோவிற்குள் மறைத்து வைத்துளார்.
உள்ளே சென்ற கடை ஊழியர் வெளியே வந்து கள்ளாபெட்டியில் இருந்து பணத்தை எடுத்து அந்த நபரிடம் கொடுத்த பிறகு அங்கிருந்து அவர் சென்றுள்ளார்
அதனைத் தொடர்ந்து கடை ஊழியர் செல்போனை தேடி பார்க்கும்போது செல்போன் காணாமல் போனது தெரியவந்தது
பிறகு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது வாய் பேச முடியாது என பணம் கேட்டு வந்த நபர் செல்போனை திருடியது தெரிய வந்தது
அதனைத் தொடர்ந்து கடை ஊழியர்கள் இது குறித்து கடை உரிமையாளர் சதீஷ்சிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் கோபி காவல் நிலையத்தில் செல்போன் திருடு போனது குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்
புகாரை பெற்றுக் கொண்ட கோபி போலீசார் செல்போனை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..