கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் முக்கிய தூய்மை பணியாளர்கள் 283 பேருக்கும் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் இந்திய மருத்துவ சங்கமும் அபி S.K. பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து அபி S.K. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.


முகாமில் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, இசிஜி, கண் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் உரிய சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்கள் இந்திய மருத்துவ சங்கத்தின் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இருதயம், எலும்பு, நுரையீரல், பெண்கள் மருத்துவம், மன நலம், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த முகாம் மில் பங்கு பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சைகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கௌரிசங்கர், சுகாதார அலுவலர் சோழராஜ், அப்புறம் ஆய்வாளர் சௌந்தர்ராஜன், நிரூபன் சக்கரவர்த்தி உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.