டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் கருப்பன் (எ) காரான்.
இவரது மகள் சூர்ய பிரிபா (21) கோபியில் உள்ள தனியார் ஸ்கூல் ஆஃப் நர்சிங்கில் டி.ஜி.என்.எம் கோர்ஸ்-இல் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டே, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர், சூரிய பிரபா வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வந்து இருந்துள்ளார்.
வீட்டில் இருந்த சூரிய பிரபா திடிரென கதவை தாளிட்டு கொண்டு வீட்டில் இருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்றி தீ வைத்துக்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
தீ உடலெங்கும் பற்றியதில் அலறி துடித்த சூர்யா பிரபாவை, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து கதவை உடைத்து மீட்டு தண்ணீர் ஊற்றி அணைத்ததாக கூறப்படுகிறது.
உடலெங்கும் தீக்காயங்களுடன் இருந்த சூரிய பிரபாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சூர்யா பிரபா இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சூரிய பிரபா வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் நர்சிங்கில் மாணவி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்றி தீ வைத்துக்கொண்டு உள்ளதாக தெரிகிறது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam