தாய் பாசத்திற்கு மிஞ்சியது உலகில் எதுவும் இல்லை, என்பதை நிரூபிக்கும் விதமாக, மழை நீர் சூழ்ந்த பொந்தினிலிருந்து ஈன்று சில நாட்களை ஆன தனது 5 குட்டிகளின் உயிரை காத்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்த தாய் எலியின் நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரை கண்களங்க வைத்துள்ளது.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஆவாரங்காட்டு பிரிவு அருகே சாலையில் வெள்ள நீர் வழிந்தோடியது.


அந்த வடிகால் மேல் பகுதியில் ஒரு பொந்தினுல் ஈன்று சில நாட்களே ஆன சுமார் 5 குட்டிகளுடன் எலி ஒன்று வசித்து வந்துள்ளன, கவுந்தபாடி பகுதியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள வடிகால் நிரம்பி அந்த குட்டிகளுடன் வசித்து வந்த பொந்து முழுவதும் மழைநீர் சூழ்ந்தது
தனது குட்டிகள் உள்ளே மாட்டிக்கொண்டு இருக்கும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன அந்த தாய் எலி, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பொந்துனும் இருக்கும் தனது குட்டிகளை ஒவ்வொன்றாக தண்ணீர் இல்லாத பகுதிக்கு வாய் மூலம் கவ்வி கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றது,
அந்த எலி வசித்து வந்த பொந்து முழுவதும் தண்ணீர் மூழ்கடித்து சென்ற நிலையில் ஒவ்வொரு குட்டிகளையும் தாய் எலி சுமார் 20 வினாடிகள் முதல் 45 வினாடிகள் தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு குட்டிகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்த வீடியோவை காண்போர், தாய் பாசம் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு, தாய் பாசத்திற்கு மிஞ்சியது உலகில் எதுவும் இல்லை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளி தற்போது வாட்ஸ் அப்பில் பேசு பொருளாக மாறியுள்ளது.