கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு போக்குவரத்து நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்காத நிலையில் 3 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தொரவலூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (28), விசைத்தறி தொழிலாளியான இவர் கடந்த 5.2.2002 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அவினாசியில் இருந்து ஊஞ்சப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்,

அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்து இறந்து போனார், இது குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்,

இந்த நிலையில் ரூ 10 லட்சம் நஷ்ட ஈட்டு தொகை கேட்டு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 17.6.2002 ஆம் தேதி அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த ரத்தினசாமி யின் குடும்பத்திற்கு 18.01.2005 தேதி ரூ 5,79,000 நஷ்ட ஈடு வழங்க கோரி போக்குவரத்து நிர்வாகத்திற்கு அன்றைய நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்
போக்குவரத்து நிர்வாகம் பணம் செலுத்தாததால் 16.2.2022 ஆம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து போக்குவரத்து நிர்வாகம் பணத்தை செலுத்தாத நிலையில் 25.3.2024 ஆம் தேதி நீதிபதி தயாநிதி (நஷ்ட ஈட்டு தொகையுடன் சேர்த்து 14,18,687, ரூபாய் போக்குவரத்து நிர்வாகம் கட்ட வேண்டி உள்ளதால் ) 3 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்
அதனை தொடர்ந்து கோபி பேருந்து நிலையில் இருந்து அந்தியூர், கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் என மொத்தம் 3 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றம் கொண்டு சென்றனர்.