

ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நம்பியூர் புளியம்பட்டி சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நம்பி ஒன்றிய திமுக செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், சிந்து ரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோ.வி செழியன் பேசியபோது
மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதையும்
நிதிநிலை அறிக்கையில்
தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து
நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டுகிறது மத்திய அரசு, அதே போல்
தொகுதி மறு சீர் அமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைத்து வருகிறது
முதலமைச்சர் ஸ்டான்லின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.