கவுந்தப்பாடியில் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து 32 லடசத்து 14 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Two bank employees who defrauded 32 ladas 14 thousand rupees from a bank account for customers in a private bank under the count. Police are also looking for 4 people, including 2 female employees in the hiding place.

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கெ வைத்துள்ளனர்.

கவுந்தப்பாடி வங்கி கிளையில் கோவையை சேர்ந்த கார்த்திகேயன் மேனேஜராகவும், கோபியை சேர்ந்த கோகுலபிரியா கேசியராகவும், கலெக்சன் அலுவலர்களாக கவுந்தப்பாடியை சேர்ந்த தீபிகா, கோபியை சேர்ந்த பிரபாகரன், சக்திவேல் ஆகியோரும் வேலை செய்து வந்துள்ளனர்.

அப்போது வாடிக்கையாளர்களிடம், குறைந்த வட்டிக்கு வங்கி கடன் பெற்று தருவதாக கூறி, 65 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் 45 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

65 வாடிக்கையாளர்களிடமும் கடன் பெறுவதற்காக கைரேகை பதிவு செய்யும் மெசினில் கைரேகை வைக்க வேண்டும் எனக்கூறி மொத்தம் 32 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு மெசேஜ் சென்ற போது தான் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்ந்தனர். இதுகுறித்து வங்கி நிர்வாகித்திடம் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கவே அதனடிப்படையில் வங்கியின் ஏரியா மேனேஜர் வெங்கடேசன்(42) வங்கியில் ஆய்வு செய்த போது மோசடி செய்து இருப்பது உறுதியானது.

அதைத்தொடர்ந்து வெங்க்டேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கவுந்தப்பாடி போலீசா போலீசார், வங்கி மேனேஜர் கார்த்திகேயன், கலெக்சன் அலுவலர் கவுந்தப்பாடியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்