கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1.50 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.


கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சிகளில், ரூ. 1.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவங்கும் விழா நடைபெற்றது,

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு ஊராட்சி பகுதிகளில் போர்வெல் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குதல், கான்கிரீட் தளம் அமைத்தல், புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, பள்ளி வகுப்பறை திறப்பு, தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை, மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா, உள்ளிட்ட பல்வேறு பணிகளை துவக்கி வைத்தும் பூமி பூஜை செய்தும் தொடங்கி வைத்தார்.இந்த வளர்ச்சி திட்ட பணிகள் துவங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்ப்பளித்தனர். பின்னர் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் யூனியன் சேர்மன் மெளதீஸ்வரன், கோபி நகர செயலாளர் கணேஷ், கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், மாவட்ட எம்ஜிஆர் அணி அருள் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சிபிஜெட் கார்த்திக், அருகில் அளுக்குளி தலைவர் இந்துமதி பாண்டுரங்கன், கோட்டு புள்ளபாளையம்ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்